Tuesday 19 January 2010

புலம்பெயர்ந்தவனின் புலம்பல் 


கடனும் வாங்கி காணியும் விற்று
வட்டிக்கு உடன் காசும் எடுத்து கொடுத்து
சிவனே என்று வெளிநாடு வந்தால் - என் பலன்
நாட்டு பிரச்சினையும் தீர்கிறது ???

நாளை திருப்பி அனுப்புவானோ என நினைத்து
இன்று கலங்குவதெல்லாம்
நேற்று வாங்கி வந்த கடன் காசை
என்று கொடுப்பேனோ என்றஞ்சியே

வட்டிக்காரனும் காசை கேட்டு
குட்டி போட்ட பூனையைப்போல்
வீட்டை சுத்தி சுத்தி வருவதாக
சுட்டி தம்பி கடிதம் எழுதியுள்ளான்.

வளவு விற்ற காசு போனாலும் பரவாயில்லை
பிழையில்லாமல் கடனையாவது கொடுப்பதற்கு
சிலகாலம் இங்கிருந்து உழைக்கவாவது
சரியான முடிவொன்று விரைவாக வாராதோ.

6 comments:

  1. எல்லாம் நல்லபடியாக இந்த வருடத்தில் வளமையுடன் நடக்கட்டும்.

    ReplyDelete
  2. நன்றி அக்கா. இது நான் எழுதியது லண்டன் வந்த புதிதில் பட்ட கஷ்டத்தின் போது. இப்போ கடவுள் புண்ணியத்தில் நன்றாக உள்ளேன். ஆனாலும் இன்னும் எத்தனையோ சகோதரர்கள் இதே நிலையில் இருக்கிறார்கள். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  3. நிச்சயம் அனைவரும் நலமுடன் வாழ்வார்கள். கவலை வேண்டாம்... உங்கள் அக்கறைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும்.மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு தோழா... நலமுடன் வாழ வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நன்றி ஞானசேகரன் அண்ணா. மீண்டும் சந்திக்கிறேன்.

    ReplyDelete