புலம்பெயர்ந்தவனின் புலம்பல்
கடனும் வாங்கி காணியும் விற்று
வட்டிக்கு உடன் காசும் எடுத்து கொடுத்து
சிவனே என்று வெளிநாடு வந்தால் - என் பலன்
நாட்டு பிரச்சினையும் தீர்கிறது ???
நாளை திருப்பி அனுப்புவானோ என நினைத்து
இன்று கலங்குவதெல்லாம்
நேற்று வாங்கி வந்த கடன் காசை
என்று கொடுப்பேனோ என்றஞ்சியே
வட்டிக்காரனும் காசை கேட்டு
குட்டி போட்ட பூனையைப்போல்
வீட்டை சுத்தி சுத்தி வருவதாக
சுட்டி தம்பி கடிதம் எழுதியுள்ளான்.
வளவு விற்ற காசு போனாலும் பரவாயில்லை
பிழையில்லாமல் கடனையாவது கொடுப்பதற்கு
சிலகாலம் இங்கிருந்து உழைக்கவாவது
சரியான முடிவொன்று விரைவாக வாராதோ.
Tuesday 19 January 2010
Saturday 26 December 2009
நிலாவாகிய பெண்ணே!
ஆனி இருபது
இளவேனில் கால இனிய பொழுது
மனதிற்கினிய ஒரு மாலைப் பொழுது
கடுங் குளிரினுள் இருந்து மனம் சலித்த எங்களுக்கு
செங்கதிர் வீசி வசந்தமளித்த பகலவன் விடைபெறும் பொழுது
ஒரு வெண்ணிலா எழுந்தது
விண்வெளியில் அல்ல
என் கண்ணெதிரே
கண்கள் நிலாவை நிதானமாய் விழுங்கின
மனதில் புதிய கனவுகள் எழுந்தன
பெண்ணிலா என்னை கடந்த பின்னர்தான் தெரிந்தது- அது
வெண்ணிலா மட்டுமல்ல இளந் தென்றலும் என்று
மண்ணிலா அழகை கண்டு மண்ணில் ஒளிந்தான் ஆதவன்
மேற்கில் தெளித்த வர்ணங்கள் - என்
மனதில் போட்டன கோலங்கள்
அந்நிலா என்னையே பார்ப்பதாய் உணர்வு- ஆனால்
வெண்ணிலா தன்னையே மறந்து மென்மையாய் சென்றது
சற்று தூரத்தில் அதன் உருவமும் மறைந்தது
மெல்ல தலை நிமிர்த்தி வானம் பார்த்தேன் இருண்டிருந்தது
என் மனதினை போலவே
மனதிற்கினிய ஒரு மாலைப் பொழுது
கடுங் குளிரினுள் இருந்து மனம் சலித்த எங்களுக்கு
செங்கதிர் வீசி வசந்தமளித்த பகலவன் விடைபெறும் பொழுது
ஒரு வெண்ணிலா எழுந்தது
விண்வெளியில் அல்ல
என் கண்ணெதிரே
கண்கள் நிலாவை நிதானமாய் விழுங்கின
மனதில் புதிய கனவுகள் எழுந்தன
பெண்ணிலா என்னை கடந்த பின்னர்தான் தெரிந்தது- அது
வெண்ணிலா மட்டுமல்ல இளந் தென்றலும் என்று
மண்ணிலா அழகை கண்டு மண்ணில் ஒளிந்தான் ஆதவன்
மேற்கில் தெளித்த வர்ணங்கள் - என்
மனதில் போட்டன கோலங்கள்
அந்நிலா என்னையே பார்ப்பதாய் உணர்வு- ஆனால்
வெண்ணிலா தன்னையே மறந்து மென்மையாய் சென்றது
சற்று தூரத்தில் அதன் உருவமும் மறைந்தது
மெல்ல தலை நிமிர்த்தி வானம் பார்த்தேன் இருண்டிருந்தது
என் மனதினை போலவே
Wednesday 16 December 2009
Subscribe to:
Posts (Atom)